‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
சமீபகாலமாக சினிமாவில் வாரிசு கலைஞர்களின் ஆதிக்கம் அதிகரித்து விட் டது. குறிப்பாக, நடிகர்களின் வாரிசு மட்டுமின்றி, தயாரிப்பாளர், டைரக்டர்களின் வாரிசுகளும் ஹீரோக்களாக வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த வரிசையில், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, ஜெயம்ரவி, கார்த்திக், சிபிராஜ், ஜீவா, சக்தி, சாந்தனு என்று பல வாரிசு நடிகர்களை பட்டியிடலாம். ஆனபோதும், அப்படி வந்த எல்லோருமே வெற்றி பெறவில்லை. சில நடிகர் களைத்தவிர பலர் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வரிசையில், சிபிராஜ், சக்தி குறிப்பிடத்தக்கவர்கள்.
இதில் சிபிராஜ் போன்றவர்கள் ஹீரோ, வில்லன் என இரண்டுவிதமான வேடங்களிலும் நடித்து மீண்டும் மார்க்கெட்டை பிடித்து வருகிறார்கள். ஆனால் சக்தி இன்னமும் பின்தங்கியே இருக்கிறார். தொட்டால் பூமலரும் படத்தில் தனது தந்தை பி.வாசு இயக்கிய படத்திலேயே நடித்த சக்திக்கு அதன்பிறகு நடித்த படங்கள் வெற்றியை கொடுக்கவில்லை. அதனால் மார்க் கெட்டில் பின்தங்கியிருக்கும் அவர், வெற்றிபெற கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறார். மேலும், தனது சக சினிமா நண்பர்களிடம் பேசுகையில், சினிமாவில் வெற்றி பெற திறமை மட்டும் போதாது. சரியான கதை தேர்வு. அந்த கதை மக்களுக்கு பிடிக்க வேண்டும். இதற்கெல்லாம் மேலாக நமக்கு அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். அப்போதுதான் சினிமாவில் பெரிய நடிகராக முடியும். அது எனக்கு இல்லாததால்தான் வெற்றி பெறாத நடிகராக இருக்கிறேன் என்றும் பீல் பண்ணி பேசுகிறாராம் சக்தி.