இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி ஆகிய படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே 20 குறும் படங்கள் வரை இயக்கியிருக்கிறார். அவர் இயக்கிய பல படங்களில் விஜயசேதுபதி- பாபி சிம்ஹா நடித்திருக்கிறார்கள். அதனால் சினிமாத்துறைக்கு வருவதற்கு முன்பே அவர்களுக்கிடையே நட்பு இருந்திருக்கிறது. அதன்காரணமாகத்தான் தான் இயக்கும் படங்களில் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் கார்த்திக் சுப்புராஜ்.
மேலும், பாபிசிம்ஹாவுக்கு தனது பீட்சா படத்தில் சிறிய வேடம் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ், ஜிகர்தண்டாவில் அவரை மெகா வில்லனாக்கினார். அந்த படத்தில் நடித்த பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருதும் கிடைத்தது. அதன்பிறகு இறைவி படத்தில் விஜயசேதுபதி- பாபி சிம்ஹா ஆகிய இருவரையுமே நடிக்க வைத்தார். ஆனால் தான் ஒரு கதையை ரெடி பண்ணியதும் விஜயசேதுபதியிடம் அதை சொல்லி கருத்து கேட்கும் கார்த்திக் சுப்புராஜ், பாபிசிம்ஹாவிடம் சொல்வதே இல்லையாம். அது மட்டுமின்றி இதுவரை தனது படங்களுக்கு அவரை புக் பண்ணும் போது எந்தமாதிரியான கதை என்றுகூட சொன்னதில்லையாம். இந்த படத்தில் நீ ஒரு வில்லன் வேடத்தில் நடிக்கிறாய் என்று மட்டும்தான் சொல்வாராம். அதன்பிறகு ஸ்பாட்டுக்கு சென்றபிறகு இதுதான் காட்சி என்று விளக்கி நடிக்க வைப்பாராம்.
மேலும், பாபி சிம்ஹாவும், கார்த்திக் சுப்புராஜ் படங்களைப்பொறுத்தவரை கதை சொல்லவில்லையே என்று ஒருநாளும் நினைத்ததில்லையாம். அவரது குறும் படங்களிலேயே நடித்திருப்பதால், எந்தமாதிரியான வேடம் பாபிக்கு பொருந்தும் என்பது அவருக்கு தெரியும் என்பதால், என்ன கதை, என்ன கேரக்டர் என்று கேட்காமல், எத்தனை நாள் கால்சீட் வேண்டும் என்று கேட்பதோடு நிறுத்திக்கொள்கிறாராம் பாபி சிம்ஹா.