ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கபாலி படத்தின் கடைசிக் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலாய் ஆகிய மொழிகளில் படத்தை அடுத்த மாதம் வெளியிட உள்ளார்கள். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளுக்கான டப்பிங் பணிகள் முடிவடைந்துள்ளன. மலாய் மொழிக்கான டப்பிங் கடந்த சில நாட்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இதற்காக மலேசியாவிலிருந்து டப்பிங் பேசும் கலைஞர்களை வரவழைத்துள்ளார்கள்.
ரஜினிக்காக மலேசிய தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக உள்ளவரும், மிமிக்ரி கலைஞருமான அருண் குமரன் மலாய் மொழியில் டப்பிங் பேசி வருகிறார். அவருடைய டப்பிங் வேலை நாளை முடிவடைய உள்ளது. ராதிகா ஆப்தே, சாய் தன்ஷிகா ஆகியோருக்குக் குரல் கொடுப்பதற்காக மலேசியாவிலிருந்து பெண் டப்பிங் கலைஞர்களும் வந்துள்ளனர். அவர்கள் தற்போது சென்னையில் உள்ள ஸ்டுடியோவில் டப்பிங் கொடுத்து வருகிறார்கள்.
மலாய் மொழி டப்பிங் முடிந்ததும் ஹிந்தி படத்திற்கான டப்பிங் வேலைகள் ஆரம்பமாக உள்ளன. படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்துள்ள ராதிகா ஆப்தே, சென்னைக்கு வந்து ஹிந்தி மொழிக்காக தன்னுடைய சொந்த குரலில் பேச உள்ளார். தமிழில் ராதிகாவுக்கு வேறு ஒருவர் டப்பிங் கொடுத்துள்ளார். இந்த மாத முடிவிற்குள் டப்பிங் பணிகள் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதைத் தொடர்ந்து ஜுலை மாதம் இரண்டாவது வாரத்தில் படம் வெளியாக உள்ளது பற்றிய முறையான அறிவிப்பை வெளியிட உள்ளதாக கபாலி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.