தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய் சேதுபதியின் மற்றுமொரு படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது. ஆனாலும், இன்னமும் 'இடம் பொருள் ஏவல், தர்மதுரை, மெல்லிசை' ஆகிய படங்களின் வெளியீடு பற்றி எந்தத் தகவலும் இல்லாமல் இருக்கிறது. மேற்சொன்ன இரண்டு படங்களையும் இயக்கியிருப்பவர் சீனு ராமசாமி. 'இடம் பொருள் ஏவல்' படம் வருகிறதோ இல்லையோ 'தர்மதுரை' படம் கண்டிப்பாக வந்துவிடும் என்று கோலிவுட்டில் சொல்கிறார்கள். 'மெல்லிசை' படம் பற்றி மெலிதாகக் கூட யாரும் பேச மாட்டேன் என்கிறார்கள்.
விஜய் சேதுபதி தற்போது 'ஆண்டவன் கட்டளை' படத்தில் நடித்து முடித்து விட்டார். இந்தப் படத்தை 'காக்கா முட்டை' படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்குகிறார். நாயகியாக 'இறுதிச் சுற்று' படத்தின் கதாநாயகி ரித்திகா சிங் நடித்துள்ளார். 'றெக்க' படத்தில் விஜய் சேதுபதி தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க உள்ளார். கைவசம் நான்கைந்து படங்களுக்கும் மேல் பேசி வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி.
ஆனாலும் நடித்து முடித்துள்ள மற்ற மூன்று படங்களின் வெளியீட்டில் அவர் தனிக் கவனம் செலுத்தாமலே இருக்கிறார். அவையெல்லாம் தயாரிப்பாளரின் வேலை என அவர் ஒதுங்கக் கூடாது. வளர்ந்து வரும் நேரத்தில் இப்படி மூன்று படங்கள் முடிவடைந்த பின்னும் வெளியாகாமல் ஒன்றுக்கொன்று முட்டிக் கொண்டு நிற்பதற்கும் அவர்தான் காரணம். அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்புக் கொள்வதை அவர் குறைக்க வேண்டும் என்று சில தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் கூறுகிறார்கள்.
அவையெல்லாம் விஜய் சேதுபதியின் காதில் விழுமா...?.