ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
எதிர்நீச்சல் படம் சிவகார்த்திகேயனுக்கு வெற்றி படமாக அமைந்தபோதும், பொன் ராம் இயக்கிய வருத்தப்படாத வாலிபர் சங்கம்தான் வசூல்ரீதியாக முதலிடம் பிடித்தது. அந்த படத்தில் சிவகார்த்திகேயன்-சூரி கூட்டணியின் காமெடி ரகளை ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றதால், அதன்பிறகு இயக்கிய ரஜினிமுருகன் படத்திலும் அதே கூட்டணியை இணைத்தார் பொன்ராம். அந்த படமும் வெற்றி பெற்றது. அதனால், மீண்டும் பொன்ராம் இயக்கத்தில் நடிக்க விரும்பிய சிவகார்த்திகேயன், அடுத்த ஸ்கிரிப்ட்டை ரெடி பண்ண சொன் னார். அதனால் முந்தைய படங்களின் சாயல் இல்லாத அளவுக்கு இன்னொரு கதையை தற்போது ரெடி பண்ணிக்கொண்டிருக்கிறார்.
மேலும், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய இரண்டு படங்க ளிலுமே சூரியுடன் இணைந்து காமெடி செய்த சிவகார்த்திகேயன், பொன்ராமின் மூன்றாவது படத்திலும் இணையலாமா? இல்லை ஒரு கேப் கொடுக்கலாமா? என்றும் யோசிக்கிறாராம். அதனால் அந்த படத்தில் காமெடியன் சதீசுக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு, ரெமோ படத்தை முடித்து விட்ட சிவகார்த்திகேயன், அடுத்தபடியாக மோகன்ராஜா படத்தில் நடிக்கிறார். அந்த படத்தில் அவருடன் நயன்தாரா ஜோடி சேருகிறார். அந்த படத்தில் நடித்து முடித்ததும் பொன்ராம் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.