மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி |
அஜீத்தின் என்னை அறிந்தால், ஆர்யாவின் மீகாமன், விஜய்யின் தெறி, விஜய சேதுபதியின் நானும் ரவுடிதான், விஷாலின் கதகளி என பல படங்களில் வில்ல னாக நடித்தவர் ஆத்மா. சில புதிய படங்களில் அதிரடியான வில்லனாக நடித்துக் கொண்டிருக்கும், இவரை மாயாபவனம் -என்றொரு படத்தில் ஹீரோவாக நடிக்க கேட்டபோது, நாயகனாகி விட்டால் வில்லன் வாய்ப்புகள் வராதே என்று தயங்கி வந்தார். அதையடுத்து, அவரிடம் பேசி சமாதானம் செய்து மாயா பவனம் படத்தில் நாயகனாக நடிக்க வைத்து விட்டனர். தற்போது அப்படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது.
வில்லனில் இருந்து நாயகனானது பற்றி ஆத்மாவைக் கேட்டபோது, சினிமாவில் நான் வில்லனாகத்தான் ரசிகர்களுக்கு பரிட்சயம். அதனால் அதே ரூட்டை தொடரவே ஆசைப்பட்டேன். ஆனால் மாயாபவனம் படத்தில் ஹீரோ வேடம் என்றாலும் அதில் ஓரளவு நெகடீவும் கலந்து இருந்தது. அதனால் இரண்டுவிதமான பர்பாமென்ஸ் கொடுக்கலாம் என்று நடித்தேன். இந்த படம் ஹாரர் கதை யில் உருவாகியிருக்கிறது. மேலும், இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருப்பதால் தொடர்ந்து அப்படித்தான் நடிப்பேன் என்றில்லை. வழக்கம்போல் வில்லன் வேடங்களையே வரவேற்கிறேன் என்கிறார் ஆத்மா.