பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மதன் தலைமறைவான விவகாரத்தில் நடிகர் ராகவா லாரன்ஸிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுமார் 2 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர். வேந்தர் மூவிஸ் சார்பில் பல படங்களை தயாரித்தும், விநியோகமும் செய்து வந்த மதன், ‛‛நான் காசிக்கு போகிறேன், கங்கையில் சமாதி ஆகிறேன் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமாகிவிட்டார்.
மதனின் இந்த கடிதம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேசமயம், அவர் நெருக்கமாக இருந்த எஸ்ஆர்எம் கல்லூரியின் நிறுவனர் பாரிவேந்தர் மீது அதிருப்தியில் இருப்பதும் தெரியவந்தது. மதன் அந்த கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மதன் மீது பல்வேறு புகார்களும் வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் மதன் மாயமாகி கிட்டத்தட்ட ஒரு மாதமாகிவிட்டது, ஆனால் அவர் என்ன ஆனார், எங்கிருக்கிறார் என்று ஒரு தகவலும் இல்லை. மதனை தேடி அவரின் சினிமா நண்பரான தயாரிப்பாளர் சிவா, காசிக்கு எல்லாம் சென்று தேடினார். மேலும் மதனை கண்டுபிடித்து தரக்கோரி மதனின் குடும்பத்தார் சார்பில் சென்னை கமிஷனரிடம் புகார் கொடுத்தனர், அதோடு சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்துள்ளனர். தொடர்ந்து மதனை தேடும் பணியை போலீசார் செய்து வருவதுடன், அவர் தொடர்புடைய நண்பர்கள், உறவினர்களிடம் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மதனின் நெருங்கிய நண்பராக கூறப்படும் நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்சிடம் மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விசாரணையானது சுமார் 2 மணி நேரம் நடந்துள்ளது. அப்போது லாரன்சிடம் மதன் பற்றி பல்வேறு கேள்விகளை போலீஸ் அதிகாரிகள் கேட்டுள்ளனர்.