விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
சிம்புவை வைத்து 'கான்' என்ற படத்தை இயக்க ஆரம்பித்த செல்வராகவன், அந்தப் படத்தை ட்ராப் பண்ணினார். அதன் பிறகு எஸ்.ஜே.சூர்யாவை வைத்து 'நெஞ்சம் மறப்பதில்லை' என்ற படத்தை அதிரடியாக தொடங்கி இயக்கி வருகிறார் செல்வராகவன். அவரது கேரியரிலேயே மிக வேகமாக படப்பிடிப்பு நடந்து முடிந்த படம் இதுதான்.
படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்து விறுவிறுப்பாக வேலைகள் நடந்தன. தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் இயக்குநர் செல்வராகவன்.
வித்தியாசமாக உருவாக்கப்பட்டிருப்பதாக ரசிகர்கள் மத்தியில் இந்த போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இன்னும் சில தினங்களில் இப்படத்தின் டீஸரையும் வெளியிடவிருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து பாடல்களும் வெளியாகின்றன. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் ஒரு ஹாரர் சைக்கோ த்ரில்லர். படத்தின் நாயகனான எஸ்.ஜே.சூர்யா ஒரு கட்டத்தில் 'சைக்கோ'வாக மாறிவிடுவாராம். கதாநாயகி ரெஜினா கெஸன்ட்ரா பேயாக நடிக்கிறார்.
'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை கீதாஞ்சலி செல்வராகவனின் 'க்ளு ஸ்டுடியோஸ்' நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் தயாரித்துக் கொடுக்க, கௌதம் வாசுதேவ் மேனனும், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மதனும் இப்படத்தை வாங்கி வெளியிடுகிறார்கள்.