பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழைக் காடிலும் டோலிவுடில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக வளர்ந்து விட்டார் சமந்தா. சிதார்த்துடன் ஏற்பட்ட காதல் முறிவிற்கு பின்னர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை சமந்தா காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் தகவல் பரவியது. அண்மையில் நாகசைதன்யாவின் அம்மா லக்ஷ்மி சமந்தாவை சென்னையில் சந்தித்து பேசினாராம்.
இந்நிலையில் சமந்தாவும் நாகசைதன்யாவும் பிளாட் ஒன்றின் பால்கனியில் நிற்பது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது உலா வந்து கொண்டு இருக்கின்றது. படப்பிடிப்புகளின் போது ஐதராபாத்தில் உள்ள பார்க் ஹையத் ஹோட்டலில் தங்குவதை வழக்கமாக வைத்துள்ளார் சமந்தா. ஆனால் தற்போது காச்சிபௌலியில் உள்ள நாகசைதன்யாவின் பிளாட்டில் சமந்தாவும் இணைந்து தங்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது. விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்த சமந்தா அப்படத்திற்கு பின்னர் ஆட்டோ நகர் சூர்யா, மனம் போன்ற படங்களில் ஜோடி சேர்ந்துள்ளார். மேலும் புதிய திரைப்படம் ஒன்றில் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர்.