தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கேரள சட்டமன்ற தேர்தல் முடிந்து ஒரு மாதத்துக்கும் மேலான நிலையில் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள பினராயி விஜயன் தலைமையில் அரசு இயந்திரம் இயங்க துவங்கியுள்ளது.. இந்தநிலையில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால், கேரள முதல்வரிடம் ஐந்து பிரச்சனைகள் உடனடியாக களையப்படவேண்டும் என தனது திறந்த கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.. கேரளா முதல்வருக்கு நண்பனாக ஒரு பிரபல சினிமா நட்சத்திரமாக இல்லாமல், அவசரகால அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டிய மக்கள் பிரச்சனை குறித்து பேசும் சாதாரண ஒரு குடிமகனாக இந்த கோரிக்கையை விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் குறிப்பிட்டுள்ள முதல் முக்கியமான 5 பிரச்சனைகள் இதுதான்.
1. ஆங்காங்கே குவிந்துகிடக்கும் குப்பைகள் தான் தெருநாய்க்கடி மற்றும் நோய்த்தொற்று என மற்ற பிரச்சனைகளுக்கு எல்லாம் மூலகாரணம்.. குப்பைகளை விரைந்து கருவத்துடன், தெருவில் குப்பை கொட்டுவோர் யாராக இருந்தாலும் தண்டிக்க வேண்டும
2. நாளுக்கு நாள் அதிகரிக்கும் சாலைவிபத்துக்களை கட்டுப்படுத்தவேண்டும். தினசரி மரணங்களில் பெரும்பாலானவை சாலை விபத்தின் மூலம் தான் நிகழ்கின்றன. இதற்கு முன்பு கமிஷனர் ரிஷிராஜ் சிங் கொண்டுவந்த, வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துதல் என்கிற நல்ல திட்டத்தை செயல்படுத்தலாமே..?
3. கேரள நகரத்து சாலைகளில் பயணிப்பது என்பது சவாலான விஷயமாக மாறிவிட்டது. காரணம் மணிக்கணக்கில் நீளும் போக்குவரத்து நெரிசல்.. இந்தநிலை அப்படியே நீடித்தால், இனி அவரவர் கார்களை வீட்டில் பூட்டிவைக்கவேண்டியதுதான்.
4. பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை, பாலியல் பலாத்காரம் இன்று பூதாகரமாக நிற்கிறது. முதலில் நடவடிக்கை எடுக்கவேண்டிய தலையாய பிரச்சனை இதுதான். போர்ர்க்கள நடவடிக்கை எடுக்கவேண்டும்..
5. உங்களது அரசு இயற்கையன் பாதுகாவலனாக இருக்கவேண்டும். துரதிர்ஷ்டவசமாக ஏற்கனவே பசுமையின் சில சதவீதங்களை நாம் இழந்துவிட்டோம். நமது சுற்றுச்சூழலை பாதுக்காக்கவேண்டும். இல்லாவிட்டால் இல்லாவிட்டால் கேரளா என்று ஒரு அழகான இடம் இருந்தது என்கிற பசுமையான நினைவுகள் மட்டுமே நம்மிடம் மிச்சம் இருக்கும்
இவ்வாறு முதல்வரிடம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ள மோகன்லால், இதில் தனது உதவி எந்த விதத்திலும் தேவைப்பட்டாலும், தான் உதவுவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.