Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

முதலமைச்சரிடம் மோகன்லால் முன்வைத்த 5 பிரச்சனைகள்..!

22 ஜூன், 2016 - 16:06 IST
எழுத்தின் அளவு:
mohanlal--request-5-demands-to-the-cm

கேரள சட்டமன்ற தேர்தல் முடிந்து ஒரு மாதத்துக்கும் மேலான நிலையில் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள பினராயி விஜயன் தலைமையில் அரசு இயந்திரம் இயங்க துவங்கியுள்ளது.. இந்தநிலையில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால், கேரள முதல்வரிடம் ஐந்து பிரச்சனைகள் உடனடியாக களையப்படவேண்டும் என தனது திறந்த கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.. கேரளா முதல்வருக்கு நண்பனாக ஒரு பிரபல சினிமா நட்சத்திரமாக இல்லாமல், அவசரகால அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டிய மக்கள் பிரச்சனை குறித்து பேசும் சாதாரண ஒரு குடிமகனாக இந்த கோரிக்கையை விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


அவர் குறிப்பிட்டுள்ள முதல் முக்கியமான 5 பிரச்சனைகள் இதுதான்.


1. ஆங்காங்கே குவிந்துகிடக்கும் குப்பைகள் தான் தெருநாய்க்கடி மற்றும் நோய்த்தொற்று என மற்ற பிரச்சனைகளுக்கு எல்லாம் மூலகாரணம்.. குப்பைகளை விரைந்து கருவத்துடன், தெருவில் குப்பை கொட்டுவோர் யாராக இருந்தாலும் தண்டிக்க வேண்டும


2. நாளுக்கு நாள் அதிகரிக்கும் சாலைவிபத்துக்களை கட்டுப்படுத்தவேண்டும். தினசரி மரணங்களில் பெரும்பாலானவை சாலை விபத்தின் மூலம் தான் நிகழ்கின்றன. இதற்கு முன்பு கமிஷனர் ரிஷிராஜ் சிங் கொண்டுவந்த, வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துதல் என்கிற நல்ல திட்டத்தை செயல்படுத்தலாமே..?


3. கேரள நகரத்து சாலைகளில் பயணிப்பது என்பது சவாலான விஷயமாக மாறிவிட்டது. காரணம் மணிக்கணக்கில் நீளும் போக்குவரத்து நெரிசல்.. இந்தநிலை அப்படியே நீடித்தால், இனி அவரவர் கார்களை வீட்டில் பூட்டிவைக்கவேண்டியதுதான்.


4. பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை, பாலியல் பலாத்காரம் இன்று பூதாகரமாக நிற்கிறது. முதலில் நடவடிக்கை எடுக்கவேண்டிய தலையாய பிரச்சனை இதுதான். போர்ர்க்கள நடவடிக்கை எடுக்கவேண்டும்..


5. உங்களது அரசு இயற்கையன் பாதுகாவலனாக இருக்கவேண்டும். துரதிர்ஷ்டவசமாக ஏற்கனவே பசுமையின் சில சதவீதங்களை நாம் இழந்துவிட்டோம். நமது சுற்றுச்சூழலை பாதுக்காக்கவேண்டும். இல்லாவிட்டால் இல்லாவிட்டால் கேரளா என்று ஒரு அழகான இடம் இருந்தது என்கிற பசுமையான நினைவுகள் மட்டுமே நம்மிடம் மிச்சம் இருக்கும்


இவ்வாறு முதல்வரிடம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ள மோகன்லால், இதில் தனது உதவி எந்த விதத்திலும் தேவைப்பட்டாலும், தான் உதவுவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in