'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சர்ச்சைகளின் நாயகன் சல்மான்கான் மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பி உள்ளார். தற்போது அவர் நடித்து வரும் சுல்தான் படத்துக்காக கடுமையாக உழைத்து வருவதாக குறிப்பிடும்போது “ஒவ்வொரு நாளும் படிப்பிடிப்பில் இருந்து திரும்பும்போது கற்பழிக்கப்பட்ட ஒரு பெண்ணை போல சோர்வாக செல்கிறேன்” என்று கூறிருந்தார். இந்த கருத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு அலைகள் எழுந்தது. இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் பெண்கள் அமைப்பினர் போர்க்கொடி தூக்கினர். இந்த கருத்திற்கு சல்மான், மன்னிப்பு கேட்கவில்லை, ஆனால் அவரின் தந்தை சலீம்கான் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இந்நிலையில் சல்மானின் சகோதரரான அர்பாஸ்கான், இந்த சம்பவத்திற்கு சல்மான் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது... சல்மான்கான் என்ன கூறினார், அவருடைய வாழ்க்கையில் என்ன நடக்கிறது, அவருக்கு எப்போது திருமணம் நடக்கும் போன்ற கேள்விக்கு எல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை. எல்லோரும் 50 வயது ஆனவர் எப்படி பேச வேண்டும் என்று தெரியாதா என்று கேட்கிறார்கள். சல்மான் என்ன செய்கிறார் என்பதை கண்காணிக்க நான் ஒன்றும் அவர் உடலில் ஜிபிஆர்எஸ் எதுவும் பொருத்தவில்லை. என்னை பொறுத்தமட்டில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் அவர் தன்னுடைய நிலையை தெளிவுப்படுத்தினால் போதும் என்று கூறியுள்ளார்.