இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் தன்னிடம் கைகுலுக்க வந்த நயன்தாராவை நோஸ்கட் பண்ணிவிட்டார் மம்முட்டி என செய்திகள் வைரலாகிக்கொண்டு இருக்க, இன்னொரு பக்கம், இல்லை, அவர் சும்மா குறும்புக்காக செய்தார் என்றும் சொல்லப்பட்டு வருகின்றன. அதேசமயம் அவ்வளவு பெரிய நடிகையிடம் அலட்சியம் காட்டிய மம்முட்டி, இன்னொரு இளம் நடிகரை, அதிலும் தனக்கு முன்பின் அறிமுகமில்லாத ஒரு நடிகரை சந்திப்பதற்காக தனக்காக போடப்பட்ட பாதுகாப்பு வளையத்தை மீறிக்கொண்டு சென்ற நிகழ்வும் அதே விழாவில் நடைபெற்றதுதான் சுவாரஸ்யம்.
விழா அரங்கத்துக்குள் மம்முட்டி நுழையும்போதே பல பிரபலங்கள் அவருடன் போட்டோ எடுத்துக்கொள்ள முயற்சித்தனர். ஆனால் பாதுகாப்பு அதிகாரிகளின் அறிவுறுத்தலை ஏற்றுக்கொண்டு யாருடனும் போட்டோ எடுக்காமல் தனது இருக்கையை நோக்கி நடந்த மம்முட்டியின் முகம், தூரத்தில் வந்துகொண்டிருந்த ஒரு நடிகரை கண்டதும் பிரகாசமானது. அதிகாரிகள் தடுத்ததையும் மீறி அவர் அருகே சென்று அவரது கையைப்பிடித்துக்கொண்டு தனது பாராட்டுக்களை தெரிவித்தார் மம்முட்டி.. இத்தனைக்கும் அவர் ஒன்றும் பிரபல நடிகர் அல்ல.. கன்னட சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகரான சஞ்சாரி விஜய்.. சொல்லப்போனால் மம்முட்டி அவரை நேரில் பார்ப்பது கூட இப்போதுதான்.
ஆனால் அவரை தேடிச்சென்று சந்திக்க வைத்தது 'நான் அவனல்ல அவள்' என்கிற கன்னடப்படத்தில் சஞ்சாரி விஜய்யின் மிகச்சிறந்த நடிப்பும், அதற்காக 2014ஆம் வருடம் அவருக்கு கிடைத்த சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் தான். அந்த படத்தை தாமதமாகத்தான் பார்த்த மம்முட்டிக்கு சஞ்சாரி விஜய்யை பார்த்ததுமே தானே நேரில் சென்று பாராட்ட வேண்டும் என தோன்றியது. அதேசமயம் இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர், நான்கு முறை தேசியவிருதுபெற்ற நடிகரான மம்முட்டி தன்னை தேடிவந்து சந்தித்ததும் தன்னை பாராட்டியதும் தன்னுடன் நின்று செல்பி எடுத்துக்கொண்டதும் எல்லாமே சஞ்சாரி விஜய்யை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.