'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
கடந்த ஏப்ரல் மாதம் மலையாளத்தில் வினீத் சீனிவாசன் டைரக்சனில் நிவின்பாலி நடிப்பில் 'ஜேகப்பிண்டே சுவர்க்க ராஜ்யம்' படம் வெளியானது. இந்தப்படத்தில் இரண்டு மூன்று காட்சிகளில், அதிலும் மொத்த கணக்குப்படி வெறும் நான்கே நிமிடங்கள் ஒப்புக்கு, வந்துபோகும் கதாநாயகியை விட, நிவின்பாலியின் தங்கையாக நடித்த 'அம்மு' கதாபாத்திரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த அம்மு கதாபாத்திரத்தில் நடித்தவர் அய்மா ரோஸி செபாஸ்டியன்.. இந்தப்படத்தை தொடர்ந்து ஜாக்பாட் அடித்ததுபோல மோகன்லால்-மீனாவின் மகளாக நடிக்கும் பாக்கியம் இவருக்கு கிடைத்துள்ளது..
'வெள்ளிமூங்கா' என்கிற ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் ஜிபு ஜேக்கப் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். அய்மாவின் நண்பரான காமெடி நடிகர் அஜு வர்கீஸ், ஜெக்கப்பிண்டே சுவர்க்க ராஜ்யம் படத்தை தொடர்ந்து வேறு எந்தப்படத்திலும் சில காலம் கமிட் ஆகாதே என இவருக்கு சொல்லிவைத்தாராம். எதற்கு என புரியாமல் காத்திருந்த அய்மா மோகன்லால் படத்தில் அவருக்கு மகளாக நடிக்கும் வாய்ப்பு வந்ததில் சந்தோஷத்தால் திக்குமுக்காடி போய்விட்டாராம். பின்னே மோகன்லாலுடன் நடிக்கும் சந்தோசம் ஒருபக்கம் இருக்க, 'த்ரிஷ்யம்' படத்தில் இந்த ஜோடியின் மகளாக நடித்த அன்ஷிபா ஹாசனும், பேபி எஸ்தர் அனிலும் அடைந்த புகழ் அவருக்கு தெரியும் தானே