டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
விஜய் டிவியில் இருந்து வந்த சிவகார்த்திகேயன் சினிமாவில் ஹீரோவாக வெற்றி பெற்றதை அடுத்து சின்னத்திரையில் இருந்து பல நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் ஹீரோக்களாகி வருகின்றனர். அதேபோல், சில தொகுப்பாளினிகளும் சினிமாவில் என்ட்ரியாகி வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது வைசாலி என்ற தொகுப்பாளினியும் இணைந்துள்ளார். இவர் சில சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்தவர். அதோடு 50க்கும் மேற்பட்ட சினிமா ஆடியோ விழாக்களை தொகுத்து வழங்கியுள்ள வைசாலி, தற்போது ராஜாமந்திரி படத்தில் நடிகையாகியிருக்கிறார்.
இந்த படத்தில் கலையரசன்-ஷாலின் முதல் ஜோடியாக நடிக்க, இன்னொரு ஜோடியாக காளி வெங்கட்- வைசாலி ஆகிய இருவரும் நடித்துள்ளனர். தனது எதிர்வீட்டில் வசிக்கும் வைசாலிக்கு காளி வெங்கட் காதல் தூது விடுவது. பின்னர் அவரை எதிர்த்த வீட்டு காளி பிளவரே என்று பாடி கலாய்ப்பது என அவர்கள் ட்ரேக் ஜாலியாக இடம்பெற்றிருக்கிறதாம்.
இதுபற்றி வைசாலி கூறுகையில், சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்ததில்லை. ஆனால் நான் தொகுத்து வழங்குவதைப்பார்த்து சிலர் நடிக்க அழைத்து வந்தனர். அப்படித்தான் ராஜாமந்திரி படத்தில் நடித்தேன். இந்த படத்தில் கிராமத்து கதை என்பதால் நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். அந்த வாழ்க்கை முறை புதிதாக உள்ளது. இருப்பினும், உடன் நடித்தவர்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுத்ததால், முடிந்தவரை நன்றாக நடித்து விட்டேன் என்று கூறும் வைசாலி, தொடர்ந்து நல்ல கேரக்டர்களாக செலக்ட் பண்ணி நடிக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறுகிறார்.