சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா |
விஜயசேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும் படத்தில் இசையமைப்பாளரான ஜஸ்டின் பிரபாகரன், அதன்பிறகு ஆரஞ்சு மிட்டாய் படத்துக்கு இசைய மைத்தவர் சில மலையாள படங்களுக்கு இசையமைக்க சென்றார். அங்கு அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தநிலையில், சமீபத்தில் தமிழில் அவர் இசையில் வெளியான ஒருநாள்கூத்து, ராஜா மந்திரி
படங்களின் பாடல்கள் ஜஸ்டின் பிரபாகரனுக்கு கோடம்பாக்கத்தில் நல்லதொரு வரவேற்பை கொடுத் துள்ளது.
குறிப்பாக, கபாலி பட டைரக்டர் பா.ரஞ்சித், ஒருநாள் கூத்து படத்தில் இடம்பெற்ற அடியே அழகே -என்ற பாடல் தன்னை மிகவும் கவர்ந்த பாடலாக சொல்லி, ஜஸ்டின் பிரபாகரனுக்கு பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளார். அதோடு, ராஜா மந்திரி படத்தில் இடம்பெற்றுள்ள எதிர்த்த வீட்டு காளிபிளவரே -என்ற பாடலும் தனக்கு பிடித்த இன்னொரு பாடல்தான் என்றும் கூறியுள்ள அவர், தமிழ் சினிமாவில் ஜஸ்டின் பிரபாகரன் ஒரு தரமான இசையமைப்பாளராக வளர்ந்து கொண்டிருக்கிறார். குறிப்பாக, ஒருநாள்கூத்து படத்தின் அடியே அழகே பாடல் அவருக்கு பெரிய அடையாளமாகியிருக்கிறது என்று கூறியுள்ளார்.
இதேபோன்று இன்னும் சில முன்னணி டைரக்டர்களும் ஜஸ்டின் பிரபாகரனை தொடர்பு கொண்டு வாழ்த்துவதோடு, அவருக்கு படவாய்ப்புகளும் கொடுத்து வருகிறார்களாம். இதனால் இதுவரை சத்தமில்லாமல் இயங்கிக்கொண்டிருந்த ஜஸ்டின் பிரபாகரன் தற்போது கமர்சியல் இசையமைப்பாளர் வட்டத்திற்குள் வந்திருக்கிறார்.