ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்ற 63வது பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா, வணக்கம் சொல்லி கைகுலுக்குவதற்காக சென்ற இடத்தில் மம்முட்டியின் புறக்கணிப்பால் அப்செட்டானது ஒருபுறம் இருக்க, அதே விழாவில் தனுஷின் செயலாலும் காயமடைந்துள்ளாராம்.. இதை விழா மேடையிலேயே பிரதிபலித்தும் உள்ளார் நயன்தாரா. விஷயம் இதுதான்.. தனுஷ் தயாரித்த காக்கா முட்டை படம் சிறந்த படமாக தேர்வானதால் அந்த விருதை பெறுவதற்காக தனுஷ் மேடையேறினார். மேலும் காக்கா முட்டை படம் பற்றியும் அந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்த ஐஸ்வர்யா ராஜேசின் நடிப்பு பற்றியும் பாராட்டி பேசியுள்ளார்.
அதேசமயம் அவர் தயாரித்த இன்னொரு படமான நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததற்காக நயன்தாராவிற்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. ஆனால் நயன்தாராவை பற்றி அவர் எந்த இடத்திலும் குறிப்பிடவும் இல்லை.. பாராட்டவும் இல்லையாம்.. காரணம் நானும் ரவுடி தான் படப்பிடிப்பின் போது காதலர்களாக மாறிய இக்குனர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ரொமான்ஸிற்காக நிறைய நேரங்களை செலவிட்டதால் படப்படிப்பு தடைபட்டு, அதனால் பட்ஜெட் அதிகமாகி, தொடர்ந்து ரிலீஸ் தள்ளிப்போனது வரை நடந்த கசப்பான சம்பவங்கள் தனுஷை ரொம்பவே கோபப்பட வைத்துவிட்டதாம்..