இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சிவாய் படத்தை தொடர்ந்து அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாக உள்ள படம் பாத்சாகோ. இப்படத்தில் அஜய்யுடன் வித்யூத் ஜம்வால் நடிக்கவுள்ள நிலையில் இன்னொரு முக்கியமான ரோலில் நடிகர் தில்ஜித் நடிக்க இருந்தார். ஆனால் இப்போது அவர் மாற்றப்பட்டுள்ளார். தில்ஜித் அதிக சம்பளம் கேட்டதாகவும் அதனால் அவர் இப்படத்திலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக நடிகர் இம்ரான் ஹாஸ்மி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் எமர்ஜென்சி காலம் பிறப்பிக்கப்பட்ட நிலையில் அப்போது நிகழ்ந்த சம்பவங்களை மையமாக வைத்து பாத்சாகோ படம் உருவாக இருக்கிறது. இதில் அஜய் - திருடனாகவும், வித்யூத் - போலீஸ் அதிகாரியாகவும், இம்ரான் - ராணுவ அதிகாரியாகவும் நடிக்க இருக்கிறார்கள். மிலன்லூதிரா இயக்கும் இப்படத்தை பூஷண் குமார் தயாரிக்கிறார்.