தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மான் வேட்டை வழக்கு, போதையில் கார் ஓட்டிய வழக்கு என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள சல்மான்கான், இப்போது தனது சுல்தான் படம் தொடர்பாக கூறிய பேட்டி ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் சல்மான்கான், அனுஷ்கா சர்மா நடித்துள்ள படம் ‛‛சுல்தான். இப்படத்தில் சல்மான் மல்யுத்த வீரராக நடித்திருக்கிறார். தற்போது இப்படத்தின் ரிலீஸ்க்கான பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் சல்மான் இப்படத்திற்காக தான் கஷ்டப்பட்ட விதத்தை கூறியது சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது. அப்படி என்ன சொன்னார் சல்மான்?
அதாவது, இப்படம் மல்யுத்த வீரர் பற்றிய கதை என்பதால் இப்படத்திற்காக கடுமையாக உழைத்தாராம் சல்மான். குறிப்பாக வெயிட் லிப்ட்டிங் உள்ளிட்ட பல உடல் உழைப்புகளை கொடுத்தாராம். ஆகையால் இப்படத்தின் ஷூட்டிங்கை முடித்து வரும் போது, ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பின்னர் எந்த நிலையில் இருப்பாரா அதேப்போன்று தான் உணர்ந்ததாகவும், தன்னால் நேராக கூட நிற்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
சல்மானின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் சல்மானை நிறையபேர் வசைபாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி சல்மான், தன்னுடைய இந்த பேச்சிற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பெண்கள் அமைப்பினரும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.