இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தமிழ் சினிமாவில் கனவு நாயகனாக வலம் வந்தவர் நடிகர் மாதவன். தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று சூப்பர் ஹிட்டாக அமைந்தது. தற்போது சில படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் மாதவன், கொடைக்கானல், ராஜவாய்க்கால் பகுதியில் சுமார் 4.8 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். இதில் ஒரு பகுதியை மாதவன் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அவர் மீது திண்டுக்கலை சேர்ந்த கணேசன் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக ஜூலை 11ம் தேதிக்குள் மாதவன் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் விளக்கம் அளிக்க உத்தரவிட்டார்.