‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
‛உட்தா பஞ்சாப் படத்திற்கும் சென்சார் போர்டுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையின் மூலம் திரையுலகினர் பலர் சென்சார் போர்டுக்கு எதிராக குரல் கொடுக்க துவங்கியுள்ளனர். நடிகர் சன்னி தியோல் தன்னுடைய ‛மொகல்லா அஸி படத்தை ரிலீஸ் செய்ய சென்சார் போர்டு அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது... ‛‛படைப்பாளிகள் அவர்கள் நினைத்ததை படத்தில் கொண்டு வருகிறார்கள். தங்களுடைய படத்திற்கு எந்த பிரச்னையும் வராது என்று தான் நினைக்கிறார்கள். ஆனால் சென்சார் போர்டு என்ற ஒன்று படத்தை சரி செய்வதாக கூறி சில காட்சிகளை வெட்டி எறிகிறார்கள். இந்த பிரச்னை நீண்டகாலமாகவே சினிமாவில் நீடித்து வருகிறது. இதற்கு இதுவரையிலும் ஒரு தீர்வு ஏற்படவில்லை. சென்சார் போர்டு படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்க வேண்டுமே தவிர அதை தடை செய்ய கூடாது என்று கூறியுள்ளார்.
சந்திர பிரகாஷ் திவேதி இயக்கியுள்ள ‛மொகல்லா அஸி படத்தில் மத உணர்வை புண்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாக கூறி சென்சார் போர்டு இப்படத்திற்கு அனுமதி மறுத்தது. இதனால் இப்படம் தற்போது கோர்ட் பிரச்னையில் சிக்கி ரிலீஸ் செய்ய முடியாமல் இருக்கிறது.