அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் பாசறையில் இருந்து வந்த பல டைரக்டர்கள் ஒரே படத்தோடு காணாமல் போய் விட்டனர். இன்னும் சிலர் ஒரு படத்தை ஹிட்டாக கொடுத்து விட்டு இரண்டாவது படத்துக்காக கடுமையாக முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், தனது முதல் படமான ராஜா ராணி படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் இயக்கினார் அட்லி. அந்த படம் மணிரத்னத்தின் மெளனராகம் சாயலில் இருந்தது என்றாலும், படம் வெற்றி பெற்றது.
அதையடுத்து தனது இரண்டாவது படத்தை உடனடியாக ஆரம்பிக்கவில்லை அட்லி. சில ஆண்டுகளாக காத்திருந்தார். அந்த சமயத்தில் தான் காதலித்த நடிகை பிரியாவையும் திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு விஜய் கால்சீட் கொடுக்க, தெறி படத்தை ஆரம்பித்தார். அஜீத்தின் வேதாளம் டைட்டீலை எப்படி ரிலீஸ் நேரத்தில் வெளியிட்டு பரபரப்பு கூட்டினார்களோ, அதேபோல் தெறி படத்தின் டைட்டீலையும் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் இருந்தபோது வெளியிட்டு பரபரப்பு கூட்டினார். அந்த வகையில், தெறி படமும் முதல் படத்தைப்போலவே அட்லிக்கு ஹிட்டாக அமைந்தது.
ஆனபோதும் தனது மூன்றாவது படத்தை அவர் உடனடியாக தொடங்கவில்லை. மாறாக, தற்போது ஜீவா நடிக்கும் சங்கிலி புங்கிலி கதவை தொற உள்பட 2 படங்களை தயாரித்து வருகிறார். இந்த நிலையில், மீண்டும் அவர் விஜய் நடிக்கும் படத்தையே இயக்கப்போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது அது கிட்டத்தட்ட உறுதியாகி வருகிறது. அதாவது பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 60வது படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் விஜய்யின் அடுத்த படத்தை அட்லி இயக்குகிறாராம். அந்த படத்திற்கு தெறி-2 என்ற டைட்டீல் வைக்கப்பட்டுள்ளதாம். மேலும், தெறி பட திரைக்கதையின் தொடர்ச்சியாக தெறி-2 கதை உருவாக்கப்பட்டுள்ளதாம்.