பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி |
விஸ்வரூபம், சிங்கம், பில்லா, அரண்மனை என பல படங்களின் இரண்டாம், மூன்றாம் பாகங்கள் உருவாகி வந்த நிலையில், தற்போது ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் படங்கள் இயக்குவதில் முன்னணி டைரக்டர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். தமிழ் சினிமாவைப்பொறுத்தவரை, ஷங்கர்தான் தனது படங்களை பல மொழிகளில் இயக்கி வெளியிட்டு வந்தார். ஆனால் பாகுபலி படத்திற்குப்பிறகு தற்போது சில முன்னணி இயக்குனர்கள் தங்களது படங்களை தமிழ், தெலுங்கு, இந்தி என இயக்கி வருகின்றனர்.
அந்தவகையில், கமலின் சபாஷ் நாயுடு, ரஜினியின் 2.ஓ படங்கள் தமிழ், தெலுங்கு, இந்தி என உருவாகி வரும் நிலையில், மகேஷ்பாபுவை வைத்து இயக்கும் படத்தை தமிழ், தெலுங்கில இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்த நிலையில், பாகுபலிக்கு இணையாக ஒரு சரித்திர படத்தை தேனாண்டாள் பிலிம்சுக்கு இயக்குகிறார் சுந்தர்.சி. இந்த செய்திகள் ஏற்கனவே வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அதோடு சூர்யா நடிப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் அவர் மறுத்து விட்டதாக இப்போது கூறப்படுகிறது.
அதற்கு காரணம், சுந்தர்.சியின் சரித்திர படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் தயாராவதோடு, அந்தந்த மொழிகளில் பிரபல ஹீரோக்களிடம் மொத்தமாக 2 ஆண்டு கால்சீட் கேட்கிறார்களாம். குறிப்பாக, பாகுபலி படத்துக்காக எப்படி பிரபாஸ் 5 படங்களில் நடிக்கும் கால்சீட்டை மொத்தமாக ஒரே படத்துக் காக கொடுத்து நடித்தாரோ அதேபோன்று நடிக்க வேண்டுமாம். ஆனால், இதற்கு அவர்கள் எதிர்பார்க்கிற மாதிரியான முன்னணி ஹீரோக்கள் இன்னும் செட்டாகவில்லையாம். அதனால் தொடர்ந்து நடிகர்களிடம் பேச்சுவார்த்தையை முடுக்கி விட்டிருக்கிறார்கள்.