'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சுப்ரமணியபுரம், ஈசன் படங்களில் நடித்து வந்தபோது இயக்கத்தில் அதிக கவனம் செலுத்தி வந்த சமுத்திரகனி, சாட்டை படத்தின் வெற்றிக்குப்பிறகு இயக்கத்தை குறைத்து விட்டு நடிப்பில் முழுவீச்சில் இறங்கினார். முதலில் பாசிட்டீவான வேடங்கில் நடித்து வந்தவர், பின்னர் நெகடீவ் ரோல்களிலும் நடித்தார். ஆனால் அப்படி அவர் நடித்த பல படங்கள் வெற்றி பெறவில்லை. அதையடுத்து அவருக்கான நடிப்பு வாய்ப்புகள் குறையத் தொடங்கியது. அதனால் இயக்கத்தில் இறங்கி அப்பா படத்தை இயக்கினார்.
இந்த நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடித்த விசாரணை படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. விளைவு மறுபடியும் சமுத்திரகனியின் நடிப்பு மார்க்கெட் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. சில படங்களில் முக்கிய வேடங்களுக்கு கமிட்டாகி வரும் அவர், தனுஷ்-வெற்றிமாறன் இணையும் வடசென்னை படத்திலும் இப்போது கமிட்டாகியிருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடமாம். இதுதவிர விரைவில் வெளியாகயிருக்கும் அம்மா கணக்கு, கொளஞ்சி ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார் சமுத்திரகனி.