ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தனது தம்பி தனுஷை வைத்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களை இயக்கியுள்ளார் செல்வராகவன். அதையடுத்து அவர்கள் புதுப்பேட்டை-2வில் மீண்டும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், தனுஷ் வெவ்வேறு டைரக்டர்களுக்கு கால்சீட் கொடுத்து விட்டதால் ஆர்யாவை வைத்து இரண்டாம் உலகம் படத்தை இயக்கினார் செல்வராகவன். அதையடுத்து கான் படத்தை சிம்பு வைத்து இயக்கினார். அப்படம் கிடப்பில் கிடக்கிறது. அதையடுத்து நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் தனுஷ் நடித்துள்ள தொடரி படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்டார் செல்வராகவன். அப்போது அங்கு கூடியிருந்த தனுஷின் ரசிகர்கள் அவரிடத்தில், புதுப்பேட்டை-2 எப்போது? என்று கேள்வி எழுப்பினார். ஆனால், அவர்கள் திரும்பத்திரும்ப கேட்ட அந்த கேள்வி வந்த திசையை நோக்கி திரும்பித்திரும்பி பார்த்தாரே தவிர, அதுகுறித்து எந்த பதிலும் சொல்லவில்லை செல்வராகவன். ஆனால் அவரது மெளனத்தை அடுத்து தனுஷாவது புதுப்பேட்டை-2 கேள்விக்கு பதில கொடுப்பாரா? என்று எதிர்பார்த்தனர் ரசிகர்கள். ஆனால் அவரும் அந்த படம் குறித்து ஒருவார்த்தைகூட பேசவில்லை. புதுப்பேட்டை-2 உருவாக சான்சே இல்லை என்பது போலவே அவர்களின் மெளன புரட்சி இருந்தது.