'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
சினிமாவில் போலீசாக நடித்து கொள்ளையர்களை அடித்து துவைத்த விஜயசாந்தி வீட்டில் கொள்ளையர்கள் புகுந்து தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். 1980களில் பிசியாக இருந்த நடிகையான விஜயசாந்தி தமிழ் சினிமாவின் முதல் ஆக்ஷன் ஹீரோயின் என்று பெயர் பெற்றவர்.
தற்போது அவர் ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் வசித்து வருகிறார். அரசியலில் இருக்கும் விஜயசாந்தி அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். இதை பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் சரியாக திட்டமிட்டு வீட்டுக்குள் நுழைந்து கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். கொள்ளை போன வைரம் மற்றும் தங்க நகைகளின் மதிப்பு பல லட்சங்கள் இருக்கும் என்று தெரிகிறது. இதுகுறித்து விஜயாசந்தியின் சகோதரர் பஞ்சாராஹில்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டு பணியாளர்களிடம் விசாரணையை தொடங்கி உள்ளனர்.