தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
1992ம் ஆண்டு 'திரன்காக் படத்தின் மூலம் இந்தி சினிமாவுக்கு அறிமுகமானவர் மம்தா குல்கர்னி. 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மம்தா கவர்ச்சி கன்னியாக விளங்கினார். அதன் பிறகு விக்கிகோஸ்வாமி என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலானார். மம்தாவின் கணவர் மராட்டிய மாநிலம் சோலாப்பூர் அருகே மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் தற்போது போதை மருந்து கடத்தல் செய்வதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நைஜீரியாவை சேர்ந்த போதை மருந்து கடத்தும்போது பிடிபட்டார். அவனை தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் மம்தா குல்கர்னியின் கணவர் நடத்தும் மருந்து தொழிற்சாலைதான் கடத்தலின் மையம் என்ற தெரியவந்தது. உடனடியாக அங்கு போலீசார் சோதனை நடத்தியபோது அங்கு இருந்து 18 கிலோ எடையுள்ள எபெட்ரின் என்ற போதை மருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய்.ª இந்த கடத்தலுக்கு மம்தா குல்கர்னியும் உடந்தையாக இருந்துள்ளார். அவர் தனது கணவருடன் இணைந்து போதை மருந்து கடத்தல்காரர்கள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளதும் தெரியவந்தது. இது தொடர்பாக அவர் வசிக்கும் கென்யா நாட்டிற்கு தகவல் கொடுக்கப்பட்டது. கென்யா போலீசார் மம்தாவையும், அவரது கணவரையும் கைது செய்துள்ளனர். அவர்கள் இருவரையும் இண்டர்போல் போலீஸ மூலம் இந்தியா கொண்டு வர நடிவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.