ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சராசரியான மசாலாப் படங்களில் நடித்து 'பி அன்ட் சி' ரசிகர்களை மட்டுமே தன் வசம் வைத்திருந்த சிம்புவை 'விண்ணைத் தாண்டி வருவாயா' என்ற ஒரே படத்தின் மூலம் 'ஏ' சென்டர் ரசிகர்களையும், ரசிகைகளையும் பெறக் காரணமாக இருந்தவர் இயக்குனர் கௌதம் மேனன். அந்தப் படத்தில் நடித்த பிறகுதான் சிம்புவுக்கென்று ஒரு தனி 'இமேஜ்' தமிழ்த் திரையுலகத்தில் கிடைத்தது. இன்னும் சொல்லப் போனால் மிகப் பெரிய திருப்புமுனையும் கிடைத்தது. அதை சிம்பு தக்க வைத்துக் கொள்ளவில்லை என்பது வேறு விஷயம்.
மீண்டும் கௌதம் மேனன் - சிம்பு இணைந்த 'அச்சம் என்பது மடமையடா' படம் சில வருடங்களுக்கு முன்பே ஆரம்பமானது. ஆனால், பல்வேறு காரணங்களால் அந்தப் படத்தின் படப்பிடிப்பு தள்ளிக் கொண்டே போய் ஒரு வழியாக கடைசிக் கட்டத்தை அடைந்தது. ஆனாலும், கடைசி நாள் படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொள்ளாமல் தவிர்த்துள்ளார். சிம்புவுக்கு தர வேண்டிய சம்பள பாக்கியும், வருமான வரிக்காக தயாரிப்பாளரான கௌதம் மேனன் தரப்பிலிருந்து செலுத்த வேண்டிய டிடிஎஸ் தொகையும் செலுத்தப்படாததே அதற்குக் காரணம் என சிம்புவின் அப்பா டிஆர் தரப்பிலிருந்து தகவல் பரப்பப்பட்டுள்ளது.
சிம்பு படப்பிடிப்புக்கு வராத கோபத்தில்தான், தமிழில் நடத்த வேண்டிய இசை வெளியீட்டு விழாவைக் கூட நடத்தாமல் தெலுங்கு மொழிக்கான இசை வெளியீட்டை மட்டும் கௌதம் மேனன் நடத்தினார் என்று தெரிகிறது.
ஏற்கெனவே, தொடர் தோல்விகளால் பாதிக்கப்பட்டுள்ள சிம்பு, தற்போது தனக்குத் திருப்பு முனையைக் கொடுத்த கௌதம் மேனனையும் பகைத்துக் கொள்வது எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்வி எழுந்துள்ளது.