இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி படத்தின் இறுதிகட்ட பணிகளும் தற்போது நிறைவடைந்து விட்டது. மேலும், கபாலி இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்தபோதே ஷங்கரின் 2.ஓவில் நடிக்கத் தொடங்கிய ரஜினி இப்போது அந்த படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்து வருகிறார். அதேசமயம், ஷங்கர் கொடுத்த ஒரு கேப்பில் கபாலி டப்பிங்கையும் பேசி முடித்தார். அதையடுத்து மற்ற நடிகர்கள் சம்பந்தப்பட்ட டப்பிங் வேலைகளில் கவனம் செலுத்தி வந்த டைரக்டர் ரஞ்சித், இப்போது கபாலி படத்தின் அனைத்து வேலைகளையும் முடித்து ரிலீசுக்கு தயார் நிலையில் வைத்திருக்கிறார். அதேசமயம் கபாலி ஜூலை15-ந்தேதி வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி வந்தபோதும், இன்னும் ரிலீஸ் தேதியை முடிவெடுக்கவில்லை என்கிறார் அவர்.
இந்த நிலையில், கபாலி படத்தை சமீபத்தில் ரஜினிக்கு போட்டு காண்பித்தாராம். அப்போது படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக இருப்பதாக சொன்னாராம் ரஜினி. அதையடுத்து படத்தை பார்த்த மேலும் சில முக்கியஸ்தர்களிடமிருந்தும் பாசிட்டீவான பதிலே வந்துள்ளதாம். அதனால் மனதளவில் உற்சாகத்தில் இருக்கும் டைரக்டர் ரஞ்சித், ஏற்கனவே கபாலி டீசருக்கு ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுத்து வருவதால், படத்திற்கும் அதே அளவு வர வேற்பை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். முக்கியமாக, ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் கபாலி படம் இருக்கும் என்கிறார் ரஞ்சித்.