மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் |
பரத் நடித்த பழனி படத்தில் தமிழுக்கு வந்தவர் காஜல்அகர்வால். அதன்பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் நடித்து வரும் அவர், தனது தாய்மொழியான இந்தியில் நடிக்கும் படங்களில் மட்டும் தனக்குத்தானே டப்பிங் பேசி வந்தார். மற்றபடி தமிழ், தெலுங்கில் அவருக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்டுகள்தான் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால், முதன்முறையாக ஜீவாவுடன் நடித்து வரும் கவலை வேண்டாம் படத்திற்காக தமிழில் தனக்குத்தானே டப்பிங் பேசியுள்ளார் காஜல்அகர்வால்.
மேலும், யாமிருக்க பயமே படத்தை இயக்கிய டிகே இயக்கி வரும் இந்த படத்திற்காக காஜலை டப்பிங் பேச சொன்னபோது ரொம்பவே தயங்கினாராம். ஆனால் நயன்தாரா, திரிஷா போன்றவர்கள் தமிழில் டப்பிங் பேசத் தொடங்கி விட்டதால் தானும் ரிஸ்க் எடுக்க தயார் ஆனாராம். அதேசமயம், தமிழ் சினிமாவில் அவர் நடிக்கத் தொடங்கி கிட்டத்தட்ட 8 வருடங்களாகி விட்டபோதும், இன்னும் அவருக்கு தமிழ் பேசவராது. மற்றவர்கள் பேசுவதை புரிந்து கொள்ளும் காஜல், ஓரிரு வார்த்தைகள்தான் தமிழில் பேசுவார். அதனால் இந்த படத்தில் டப்பிங பேச வேண்டும் என்று முடிவானதும் வசனங்களை ஆங்கிலத்தில் எழுதி வைத்துக்கொண்டு சில நாட்களாக பயிற்சி எடுத்து வந்து பேசினாராம்.