வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் |
காமெடி கிங் என்று ரசிகர்களால் அழைக்கபெறும் கவுண்டமணி, நீண்ட ஓய்வுக்கு பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். 1980-90களில் காமெடியில் கொடி கட்டி பறந்தவர் கவுண்டமணி. டைரக்டர் பாரதிராஜாவின், "16 வயதினிலே" படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். தனக்கென்று ஒரு ஸ்டைல், லொள்ளான பேச்சு உள்ளிட்டவைகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. அதிலும் நடிகர் செந்திலுடன் இவர் சேர்ந்து பண்ணிய காமெடிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. கவுண்டமணி-செந்தில் காமெடிக்காவே "கரகாட்டக்காரன்" உள்ளிட்ட பல படங்கள் 100நாட்களையும் தாண்டி தியேட்டர்களில் ஓடி, வசூலையும் குவித்தது.
காமெடியில் கொடிகட்டி பறந்த கவுண்டமணி, கடந்த சில ஆண்டுகளாகவே நடிக்காமல் இருந்து வருகிறார். இதற்கு காரணம் அவரது உடல்நிலை ஒத்துழைக்காதது தான். இந்நிலையில் கவுண்டமணி மீண்டும் நடிக்க இருப்பதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது உடல்நிலை சீரான நிலைக்கு வந்துவிட்டதாகவும், மீண்டும் நடிக்கக்கூடிய அளவுக்கு அவருக்கு தெம்பு வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் சில இளம் இயக்குநர்கள் கூட சமீபத்தில் அவரை சந்தித்தாகவும், சில படங்களில் அவர் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் தெரிகிறது.
அப்படின்னா, கூடியவிரைவில் ரசிகர்கள் அனைவரும் கவுண்டமணியை புதுதெம்புடன், அதே லொள்ளுடன் திரையில் காணலாம் என்று சொல்லுங்கள்...!