டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
காதல் கிசுகிசுக்களிலிருந்து எந்த ஹீரோவும், எந்த ஹீரோவும் தப்பியதில்லை. சிலருக்கு காதல் கிசுகிசு ஒருவருடனே முடிந்து, அவர்களுடனே திருமணமும் நடந்துவிடும். சிலருக்கு கிசுகிசுவாக மட்டுமே முடிந்து விடும். சிலருக்கோ அந்த கிசுகிசு ஆள் மாறி மாறி தொடர்ந்து கொண்டேயிருக்கும். கடந்த சில வருடங்களாகவே காதல் கிசுகிசுவில் அதிகம் இடம் பெற்றவர் நயன்தாரா. அதற்கடுத்த இடத்தில் இருப்பவர் அஞ்சலி.
சில வருடங்களுக்கு முன்பு அவருடைய சித்தியுடன் ஏற்பட்ட தகராறால் சென்னையை விட்டு விலகி ஹைதராபாத்தில் தஞ்சமடைந்தார். அஞ்சலி சினிமாவில் நடிக்க ஆரம்பித்த போது, அவருக்கும் ஒரு இயக்குனருக்கும் காதல் என்று செய்தி பரவியது. அவர் கொஞ்சம் முன்னணிக்கு வந்த போது அவருக்கும் ஒரு தயாரிப்பாளருக்கும் காதல் என்று செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டது. ஹைதராபாத்திற்குச் சென்ற பிறகும் அஞ்சலிக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவருக்கும் காதல் என்று செய்தி பரவியது.
தற்போது அஞ்சலிக்கும், நடிகர் ஜெய்க்கும் காதல் என மீண்டும் காதல் கிசுகிசு பரவி வருகிறது. அஞ்சலியின் பிறந்த நாள் இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த போது நடிகர் ஜெய், “இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அஞ்சு” என்று செல்லமாக அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். பதிலுக்கு அஞ்சலியும், “நன்றி ஜெ...இதுதான் என்னுடைய சிறந்த மற்றும் மிக மகிழ்ச்சியான பிறந்த நாள், என்னுடன் எப்போதும் இரு,” என்று தெரிவித்துள்ளார். இந்த இரண்டு வார்த்தைப் பரிமாற்றங்களும் டிவிட்டரில் அனைவருக்கும் தெரியும்படி மீண்டும் நடந்திருப்பதுதான் அஞ்சலி, ஜெய் காதல் பற்றிய அடுத்த கிசுகிசு வரக் காரணமாமக அமைந்துள்ளது.