‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தயாரிப்பாளர் சங்கத்திற்கு, ஒளிப்பதிவாளர்கள் சங்கத்திற்கு இடையே ஏற்பட்ட பிரச்னையால் இன்றைய படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதாக கோடம்பாக்கத்தில் காலை முதல் செய்தி வேகமாக பரவி வந்தது. ஆனால் இதை தயாரிப்பாளர்கள் சங்கம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது...
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். அதில் இன்றைக்கு (18.06.16) தமிழ் படப்பிடிப்புகள் நிறுத்தப்படுவதாகவும், அது தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூலம் அறிவிக்கப்பட்டது என்றும் செய்தி பரவியுள்ளது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பமான செய்தி. தயாரிப்பாளர் சங்கத்தின் மூலம் எந்த படப்பிடிப்புகளுக்கும் தடை விதிக்கப்படவில்லை என்பதே உண்மை. எனவே இதுபோன்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம், எப்பவும் போல படப்பிடிப்புகள் அனைத்தும் சுமூகமாக நடைபெறுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.