Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கும்கி இரண்டாம் பாகத்துக்கு தயாராகிறார் பிரபுசாலமன்

18 ஜூன், 2016 - 16:34 IST
எழுத்தின் அளவு:
Prabhu-Solomon-ready-for-Kumki-2

பிரபு சாலமன் தற்போது இயக்கியுள்ள 'தொடரி' படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து டப்பிங் மற்றும் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடந்து வருகிறது. சில கிராபிக்ஸ் காட்சிகளை இணைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் 'கும்கி' படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளார் பிரபு சாலமன்.


விக்ரம் பிரபு நடித்த முதல் படமான 'கும்கி'யில் அவர் யானை பாகன். படத்தின் முடிவில் அவர் வளர்த்த கும்கி யானை கொம்பன் என்ற மதம்பிடித்த யானையுடன் மோதி இறந்து விடும். எல்லாத்துக்குமே தனக்கு வந்த காதல்தான் என்று கதறியபடியே அவர் நடந்து செல்வது போன்று கதை முடியும். இப்போது இரண்டாம் பாகத்தின் கதை என்ன என்பது பற்றி பிரபுசாலமன் யூனிட்டிலிருந்து கசிந்த கதை இதுதான்.


யானையை பறிகொடுத்த விக்ரம் பிரபு தனியாக அமைதியாக விவசாய வேலைகள் செய்து வாழ்ந்து வருகிறார். அப்போது தொடர்ச்சியா யானைகள் காட்டை விட்டு நாட்டுக்குள் வருவதும், சாலைகளை கடப்பதுமாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் யானைகளின் வாழ்விடங்கள் சுருங்கி விட்டது. யானைகளின் வழித்தடங்களில் கட்டிடம் கட்டிவிட்டதால் அவைகள் வழிமாறி வருகின்றன. ஆனால் இதை புரிந்து கொள்ளாமல் யானைகள் மீது மக்கள் குற்றம் சுமத்துகிறார்கள். இவற்றை கவனித்து அரசுடன் போராடி ஒட்டுமொத்த யானைகளையும் எப்படி காப்பாற்றுகிறார் என்பது கதை என்கிறார்கள்.


கும்கி யானை என்றால் மதம் பிடித்த யானையை அடக்கி வழிக்கு கொண்டு வரும் பயிற்சி பெற்ற யானை. அதேபோல சமூகத்திற்குள் ஒருவன் மதம் பிடித்து ஆட்டம் போடுகிறான். அவனை அழிக்க கும்கியாக விக்ரம் பிரபு புறப்படும் நகரத்து கதை என்றும் சொல்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in