ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு |
'ஆள்' படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் தற்போது இயக்கி உள்ள படம் 'மெட்ரோ'. பாபி சிம்ஹாவுடன் சிரிஷ் என்ற புதுமுகம் நடிக்கிறார். 'டார்லிங் 2' படத்தில் நடித்த மாயா ஹீரோயின். இந்த படம் சென்னையில் அடிக்கடி நடக்கும் செயின் பறிப்பு சம்பவம் பற்றிய படம். தணிக்கை குழுவினர் படம் பார்த்து விட்டு இந்த படம் பெண்கள் கழுத்தில் கிடக்கும் நகையை எப்படி பறிக்கலாம் என்பதை கற்றுத் தருகிறது. வன்முறையும் அதிகமாக இருக்கிறது என்று கூறி சான்றிதழ் தர மறுத்துவிட்டது. பின்னர் மறு தணிக்கைக்கு சென்று 'ஏ' சான்றிதழ் பெற்றிருக்கிறார்கள்.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் கூறியதாவது: என்னுடைய படத்துக்கு 'யூ' சான்றிதழ் கிடைக்காது என்பது எனக்குத் தெரியும். காரணம் கதை களம் அப்படி. அதனால்தான் 'மெட்ரோ' என்று ஆங்கிலத்தில் பெயர் வைத்தேன். இது செயின் அறுப்பு திருடர்கள் எப்படி உருவாகிறார்கள். எங்கே போய் முடிகிறார்கள். செயினை பறிகொடுக்கும் குடும்பத்தின் நிலை என்ன ஆகிறது. இதில் போலீசின் பங்கு என்ன? அண்டர்கிரவுண்ட் தங்க கடத்தலின் பங்கு என்ன என்பதை பற்றி எடுக்கப்பட்டுள்ள படம்.
படத்தை தணிக்கை குழு பார்க்கும் முன்பே இதற்கு நீங்கள் தாராளமாக 'ஏ' சான்றிதழ் கொடுக்கலாம் என்று கூறினேன். ஆனால் அவர்கள் படத்துக்கு சான்றிதழே தர முடியாது. இது மக்கள் பார்க்கும் படம் அல்ல. திருடர்கள் செயின் பறிப்பது எப்படி என்பது பற்றி கற்றுக் கொள்வார்கள் என்றனர். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் என்ன செயின் திருட கற்றுக்கொடுக்கவா படம் எடுத்திருக்கிறேன்.
இது செயின் திருடர்களிடமிருந்து மக்களை தங்களை காப்பாற்றிக் கொள்ள சொல்லும் விழிப்புணர்வு படம் என்று எவ்வளோ எடுத்து சொன்னோம். எந்த காட்சியை நீக்க வேண்டும் என்று சொல்லுங்கள் நீக்குகிறோம் என்றோம். எதையும் அவர்கள் கேட்கவில்லை. அதானல்தான் மறு தணிக்கை சென்று எந்த கட்டும் இல்லாமல் 'ஏ' சான்றிதழ் பெற்றோம். ஒரு மாதம் தாமதம், சில லட்சம் வீண் செலவானது. வருகிற 24ந் தேதி படத்தை வெளியிடுகிறோம். என்றார்.