‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
நடிகர் திலகம் சிவாஜியை சினிமா உலகத்துக்கு அறிமுகப்படுத்திய படம் 'பராசக்தி'. புராண படங்களும், பக்தி படங்களும் வந்து கொண்டிருந்த நேரத்தில் புரட்சிகரமான கருத்துக்களை பேசிய படம். தமிழ் சினிமாவின் திருப்புமுனை திரைப்படம். அதில் தி.மு.க தலைவர் எழுதி சிவாஜி பேசிய வசனம் இன்றைக்கும் பிரபலம். பராசக்தி படத்திற்காக ஒல்லியா இருந்த சிவாஜி 3 மாதங்கள் நன்றாக சாப்பிட்டு வெயிட் போட்டு நடித்தார். அவர் முதன் முதலில் நடித்த இடத்தில் ஏவிஎம் ஸ்டூடியோ நிர்வாகிகள் நினைவு தூண் அமைத்திருக்கிறார்கள்.
சிவாஜி நடித்த முதல் படம் பராசக்தி என்றுதான் எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் அது உண்மை அல்ல. அவர் முதலில் நடித்த படம் 'பூங்கோதை'. அப்போது பிரபலமாக இருந்த நடிகை அஞ்சலிதேவி, அஞ்சலி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தெலுங்கு படங்களை தயாரித்துக் கொண்டிருந்தார். அவர் தெலுங்கு, தமிழில் தயாரித்த படம் தான் பூங்கோதை. 1953ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் சிவாஜி ஹீரோ அல்ல. அக்கினினேனி நாகேஸ்வரராவ் ஹீரோ, அஞ்சலிதேவி ஹீரோயின். ஆதி நாரயணராவ் இசை அமைத்திருந்தார், எல்.வி.பிரசாத் இயக்கி இருந்தார். பராசக்தி 1952ம் ஆண்டே வெளிவந்து விட்டதால் சிவாஜி நடித்து வெளியான முதல் படம் என்ற பெருமையை பெற்றது.