வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் வெளியான படம் தனி ஒருவன். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மக்களிடம் வரவேற்பு பெற்ற இப்படத்தில் அரவிந்த் சாமியின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டது. அதுமட்டுமல்ல, அவருக்கு பல்வேறு விருதுகளும் கிடைத்தன. இன்று நடைபெற உள்ள பிலிம்பேர் விருது வழங்கும் விழாவிலும் தனி ஒருவன் படத்துக்காக சிறந்த குணசித்திர நடிகர் பிரிவில் அரவிந்த்சாமியின் பெயர் நாமினேட் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் திரைப்பட விருதுகள் பற்றி, "சில விருதுகள் கேலிக்கூத்தானவை. நிகழ்ச்சிக்கு வாருங்கள் என அழைக்கும்போதே சொல்வார்கள் நீங்கள் ஒரு விருது பெற்றுள்ளீர்கள் என்று. அப்போது நீங்கள் அவர்களிடம் சொல்லுங்கள், "என்னால் நிகழ்ச்சிக்கு வரமுடியாது விருதை வேறு யாருக்காவது வழங்குங்கள். எல்லா நடிகர்களும் அவர்களுடைய உழைப்புக்காக விருது பெற தகுதியானவர்களே. எனவே நீங்கள் விரும்பும் யாராவது ஒருவருக்கு அந்த விருதைக் கொடுங்கள்" என்று. விருது வழங்கும் நிகழ்ச்சிகளை தேர்தலைப் போல் ஆக்காதீர்கள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கமெண்ட் அடித்திருக்கிறார் அரவிந்த்சாமி.
எந்த விருது வழங்கும் விழாவை மனதில் வைத்து அரவிந்த்சாமி இப்படி ட்வீட் செய்துள்ளார் என்று தெரியவில்லை. ஒருவேளை இன்றைக்கு வழங்கப்படும் விருது தனக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்ற தகவல் அறிந்து இப்படி கமெண்ட் அடித்திருக்கிறாரா அரவிந்த்சாமி?