ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் |
கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் கபாலி படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ரித்விகா. பாலாவின் பரதேசி படத்தில் அறிமுகமான ரித்விகா அதன் பிறகு சில படங்களில் நடித்தாலும் கபாலியில் கமிட்டான பிறகே படத்துறையின் பார்வை அவர் மீது திரும்பியது.
கபாலி படத்தின் டீசர்களிலும் அதன் விளம்பரங்களிலும் ரித்விகாவின் முகம் இல்லை. அவரது கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது என்பதால் அந்த சஸ்பென்ஸை காப்பாற்றுவதற்காக இந்த ஏற்பாடாம். "கபாலி படத்தில் ரஜினிக்குப் பிறகு, மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ரித்விகாதான். அதனால் தான் அவருடைய புகைப்படங்களை வெளியிடாமல் வைத்திருக்கிறோம். படத்தைப் பார்க்கும் போது ரித்விகா பாத்திரம் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தும்.” என்று தன்னுடைய நண்பர்கள் வட்டாரத்தில் சொன்னாராம் பா.ரஞ்சித்.
ரஜினியும் ரித்விகாவும் இணைந்து நடிக்கும் ஒரு காட்சி படமாக்கியபோது அவரது நடிப்பைப் பார்த்து அசந்துபோன ரஜினி "என்னப்பா.. இந்தப் பொண்ணு இந்த சின்ன வயதில் இப்படி நடிக்குது" என்று இயக்குநர் ரஞ்சித்திடம் ஆச்சர்யப்பட்டாராம். அதுமட்டுமல்ல, ஒரு முறை ரித்விகா வசனம் பேசி முடித்து கட் சொன்னவுடன், ரஜினி ரொம்ப நேரம் கைதட்டி பாராட்டி இருக்கிறார்.
அந்தளவுக்கு ரித்விகா உடைய கதாபாத்திரம் கபாலி படத்தில் பேசப்படும் அளவுக்கு இருக்கும் என்று சொல்லப்படும்நிலையில், ரித்விகா நடித்த ஒரு நாள் கூத்து படம் அண்மையில் வெளியானது. அந்தப்படத்தில் திருமணத்துக்கு முன்பே ஒரு ஆணுடன் உறவு கொள்வதுபோல் ஒரு காட்சியில் நடித்திருக்கிறார் ரித்விகா. அந்தப் படத்தைப் பார்த்ததும் பா.ரஞ்சித் அப்செட்டாகிவிட்டாராம். அதுமட்டுமல்ல, ரித்விகாவுக்கு போன்போட்டு, ஒரு நாள் கூத்து படத்தில் அப்படி ஏன் நடித்தாய் என்று காய்ச்சி எடுத்ததாக கோலிவுட்டில் பேச்சு உலாவுகிறது.