தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
காமெடி நடிகரான காளி வெங்கட் இறுதிச்சுற்று படத்தில் ரித்திகா சிங்கிற்கு அப்பாவாக நடித்தார். அந்த படம் அவருக்கு பெரிய ரீச்சைக்கொடுத்தது. அதனால் இப்போது சில படங்களில் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக, ராஜா மந்திரி படத்தில் கலையர சனுடன் இன்னொரு நாயகன் போன்ற வேடத்தில் நடித்துள்ளார். அதோடு காளி வெங்கட்டுக்கும் ஒரு ஜோடி நடிகை இருக்கிறார். அவரைப்பார்த்து எதிர்த்த வீட்டு காளிபிளவரே என்று அவர் பாடும் காதல் பாட்டும் உள்ளது.
மேலும், தனக்கு ஜோடியாக நடித்த வைசாலி என்ற அந்த புதுமுக நடிகைக்கு ஸ்பாட்டில் நிறைய நடிப்பு சொல்லிக்கொடுத்தாராம் காளி வெங்கட். அதனால்தான் முதல் படத்திலேயே என்னால் மற்றவர்களை கைதட்டி ரசிக்கும் அளவுக்கு நடிக்க முடிந்தது என்கிறார் வைசாலி. மேலும் வைசாலி கூறுகையில், இந்த ராஜாமந்திரி படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு மன்னார்குடியில்தான் நடந்தது. அப்போது அந்த பகுதி மக்களும், இந்த படக்குழுவினரும் எனக்கு உறுதுணையாக இருந்தனர். அதோடு, வில்லேஜ் சப்ஜெக்ட் என்றால் ஈசியானது என்கிறார்கள். ஆனால் என்னைப்பொறுத்தவரை இந்த மாதிரி கிராமத்து கதையில் நடிப்பது ரொம்ப ரொம்ப கஷ்டமானது என்கிறார் வைசாலி.