மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர கூட்டம் நேற்று சங்க வளாகத்தில் நடந்தது. சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு தலைமை தாங்கினார். தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில் 'உத்த பஞ்சாப்' என்ற இந்திப் படம் ரிலீசுக்கு முன்பே இணையதளத்தில் வெளியான விவகாரம், பெப்சி தொழிலாளர் சம்பள உயர்வு, திருட்டு விசிடி ஒழிப்பு உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தின் முடிவில் விஷால் நிருபர்களிடம் கூறியதாவது: 'உத்த பஞ்சாப்' படம் இணைய தளத்தில் வெளியாகி இருப்பது இந்திய சினிமாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. எல்லா மொழி தயாரிப்பாளர்களும் இதுகுறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இன்று 'உத்த பஞ்சாப்' படத்துக்கு நடந்தது நாளை யார் படத்துக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால் இது குறித்து விவாதித்தோம். திருட்டு விசிடி எடுக்க உதவும் தியேட்டர்களுக்கு நிரந்தர தடைவிதிப்பது குறித்தும் பேசினோம். நவீன குறியீடு மூலம் திருட்டு விசிடி எடுக்கப்படும் தியேட்டரை கண்டுபிடித்து விட முடியும்.
இந்த பணியில் தயாரிப்பாளர்களுடன் நடிகர்களும் இணைந்து செயல்பட வேண்டும். திருட்டு விசிடியால் திரையுலகம் கோடிக் கணக்கான ரூபாயை இழந்து வருகிறது. மத்திய மாநில அரசுள் இணைந்து திருட்டு விசிடியை ஒழிக்க முன்வரவேண்டும். அதற்கு நடிகர் சங்கத்தின் ஒத்துழைப்பு எப்போதும் இருக்கும். என்றார்.
கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் சங்க துணை தலைவர்கள் பைவ் ஸ்டார் கதிரேசன், தேனப்பன், செயலாளர்கள் டி.சிவா, ராதாகிருஷ்ணன், திரைப்பட வர்த்தக சபை செயலாளர் ரவி கொட்டாரக்கரா, ஆனந்தா பிலிம்ஸ் சுரேஷ், டி.ராஜேந்தர், ஞானவேல்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.