சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் |
சினிமாவில் குறுகிய காலத்தில் உச்சத்தைத் தொட்டவர்களை படத்துறையில் உள்ளவர்கள் உன்னிப்பாக கவனித்து வருவார்கள். அவர்கள் சின்னதாக ஏதாவது தவறு செய்தால் கூட அதை பூதாகரமாகப் பேசுவார்கள். அதனாலேயே சினிமாவில் ஜெயித்த பலர் அடக்கி வாசிப்பார்கள். அறிமுகமான சில வருடங்களிலேயே அதீத வளர்ச்சியைக் கண்ட சிவகார்த்திகேயனும் இப்படி கவனிக்கப்படுகிறார். மற்றவர்களின் பார்வை தன் மீது படர்ந்து இருப்பதை அறிந்தோ அறியாமலோ சிவகார்த்திகேயன் செய்யும் ஒவ்வாரு செயலும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.
உதாரணத்துக்கு மற்ற தயாரிப்பாளர்களின் படத்தில் நடிக்காமல், தொடர்ந்து நான்கு படங்களை தன்னுடைய பேனரிலேயே சொந்தமாக அவர் தயாரிப்பதை படத்துறையில் உள்ளவர்கள் நெகட்டிவ்வாக விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நடிக்கும் 'ரெமோ'வின் படப்பிடிப்பு முடிந்து, நேற்று டப்பிங் வேலைகள் துவங்கி விட்டன! டப்பிங் துவங்கும்போது அதற்காகவும் ஒரு பூஜை போட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்து மீடியாக்களுக்கு அனுப்பியுள்ளார்கள்!
சினிமாவைப் பொறுத்தவரையில் படம் துவங்கும்போதுதான் பூஜை போடுவார்கள்.! 'ரெமோ' படக்குழுவினர் படம் துவங்கும்போது பூஜை போட்டதோடு, டப்பிங் துவங்குவதற்காகவும் பூஜை போட்டுள்ளனர்.