டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
'எங்கேயும் எப்போதும்' படத்தில் இணைந்து நடித்தபோது ஜெய், அஞ்சலி இருவருக்கும் காதல் என்று பரபரப்பாக பேசப்பட்டது. அதை இருவருமே மறுக்கவில்லை. ஆனால் அப்போது அஞ்சலியின் 'குடும்ப நண்பராக' இருந்த இயக்குநர் களஞ்சியம் என்பவர் ஜெய்யிடமிருந்து அஞ்சலியை மீட்டுத்தரும்படி நடிகர் சங்கத்தில் வாய்மொழி புகார் கொடுத்திருக்கிறார். அதன் பிறகு சித்தியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய அஞ்சலி ஹைதரபாத்தில் செட்டிலானார். அதனால் அஞ்சலி - ஜெய் காதல் விவகாரம் அடங்கிப்போனது.
இந்நிலையில் ஐந்து வருடங்களுக்கு பிறகு ஜெய், அஞ்சலி இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை அறிமுக இயக்குனர் சினிஷ் என்பவர் இயக்குகிறார். இது காதல் கலந்த திகில் படமாம்! இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வேறு ஒரு நடிகையைத்தான் இயக்குநர் கமிட் பண்ண திட்டமிட்டிருந்தார். ஜெய்தான் அஞ்சலியை சிபாரிசு செய்து தனக்கு ஜோடியாக்கியுள்ளார். அஞ்சலியும் நானும் நண்பர்கள் என்று சொல்லும் ஜெய் அது காதலாக மாறவும் வாய்ப்பிருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்ததை நினைவில் கொள்க.