Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நிலமோசடி வழக்கு : கைதாகிறார் நடிகர் வடிவேலு!

02 ஆக, 2011 - 09:59 IST
எழுத்தின் அளவு:

பல கோடி ரூபாய் மதிப்புப் பெறும், ஆறு கிரவுண்டு இடத்திற்கு, போலி ஆவணம் தயாரித்து, மோசடியில் ஈடுபட்டுள்ள நடிகர் வடிவேலு, அவரின் மனைவி உள்ளிட்ட, நான்குபேர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, புறநகர் கமிஷனர் ராஜேஷ் தாசிடம் ஓய்வு பெற்ற ஐ.ஓ.பி., உதவி பொதுமேலாளர் பழனியப்பன் புகார் அளித்தார். இதையடுத்து வடிவேலு கைது செய்யப்படலாம் என தெரிகிறது.

ஓம்சக்தி கார்மென்ட்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் ராமச்சந்திரன், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில், கடந்த 1993ம் ஆண்டு ஐந்து லட்ச ரூபாய் கடன் பெற்றார். கடனை திருப்பிச் செலுத்தாததால், அந்நிறுவனத்திற்குச் சொந்தமான இரும்புலியூர், முடிச்சூர் சாலையில் உள்ள ஆறு கிரவுண்டு நிலத்தை, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் பொது ஏலத்தில் விட்டு, கடன் தொகையை வசூலிக்கத் திட்டமிட்டது. அதன்படி, கடந்த 2004ம் ஆண்டு பத்திரிகையில் ஆறு கிரவுண்டு நிலத்தை பொது ஏலம் விட, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் விளம்பரம் செய்தது. இந்த விளம்பரத்தைப் பார்த்த, ஓய்வு பெற்ற இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உதவி பொது மேலாளர் பழனியப்பன், பொது ஏலத்தில் கலந்து கொண்டு, 20 லட்சம் ரூபாய்க்கு ஆறு கிரவுண்டு காலி இடத்தை ஏலத்தில் எடுத்தார். அந்த இடத்தை காலியாகவே வைத்திருந்தார்.

இந்நிலையில், கடந்த 2009ம் ஆண்டு, அந்த இடத்தில் ஒரு சிலர் சுற்றுச்சுவர் கட்டி வருவதாக கேள்விப்பட்டு, பழனியப்பன் அங்கு சென்றார். சுற்றுச்சுவர் கட்டும் இடத்தில் இருந்த நபரிடம், தனக்குச் சொந்தமான இடத்தில் சுற்றுச் சுவர் கட்டக்கூடாது என, பழனியப்பன் தகராறு செய்தார். அங்கிருந்த நடிகர் வடிவேலுவின் மேலாளர் ஒருவர், "இந்த இடம் நடிகர் வடிவேலுக்கு சொந்தமானது; யாரிடம் வேண்டுமானாலும் புகார் சொல்லுங்கள் என்று கூறியதால், பழனியப்பன் அதிர்ச்சியடைந்தார். பத்திரப் பதிவு அலுவலகத்தில், வில்லங்கச் சான்றுக்கு பழனியப்பன் விண்ணப்பித்தார். அதில், ஓம்சக்தி கார்மென்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமச்சந்திரனின் மனைவி, மகன் பிரபு ஆகியோர், போலி ஆவணம் தயாரித்து, நடிகர் வடிவேலுக்கு பொது அதிகாரம் கொடுத்தது தெரியவந்தது.

மேலும், நடிகர் வடிவேலு பொதுஅதிகாரத்தைப் பெற்று, அவரது மனைவி விசாலாட்சிக்கு, "கிப்டாக ஆறு கிரவுண்டு இடத்தை வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. பல கோடி ரூபாய் மதிப்புப் பெறும் இரும்புலியூர், முடிச்சூர் ரோட்டில் உள்ள ஆறு கிரவுண்டு இடத்திற்கு போலி ஆவணம் தயாரித்து, மோசடியில் ஈடுபட்ட நடிகர் வடிவேலு, அவரது மனைவி விசாலாட்சி, ராமச்சந்திரனின் மனைவி மற்றும் மகன் பிரபு ஆகியோர் மீது, நடவடிக்கை எடுக்கும்படி புறநகர் கமிஷனர் ராஜேஷ் தாசிடம், ஓய்வு பெற்ற ஐ.ஓ.பி., உதவி பொதுமேலாளர் பழனியப்பன் புகார் அளித்தார். புகாரை புறநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் உத்தரவிட்டார்.


புகாரில் கூறப்பட்டு உள்ள ஆவணங்கள் முறையாக உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர். அத்துமீறி நுழைந்து இருப்பது உறுதியானால் நடிகர் வடிவேலுவும், அவருடைய மனைவியும் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

Advertisement
கருத்துகள் (16) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (16)

Anil - dubai,இந்தியா
05 ஆக, 2011 - 12:31 Report Abuse
 Anil வடிவேலு ..உங்களுக்கு இந்த அரசிய்ச்ல் தேவய? you are a good artist .. இந்த பொலிடிக்ஸ் விட்டு விடு ..பொழப்பே பாரு...
Rate this:
karthik - Kerala,இந்தியா
03 ஆக, 2011 - 13:21 Report Abuse
 karthik தி மு க வுக்கே அடி சறுக்கும் பொது காமெடியனுக்கு சறுக்காதாஎன்ன.
Rate this:
siva - tanjore,இந்தியா
03 ஆக, 2011 - 10:15 Report Abuse
 siva ஐயோ எப்பவே கண்ணை கட்டுதே ..... கிணத்தை காணும்னு கேஸ் கொடுத்தவன்கிட்டேயே இடத்தை காணோம்னு கேஸ் கொடுதுட்டன்கேலே ....
Rate this:
Javith - shanghai,சீனா
03 ஆக, 2011 - 07:01 Report Abuse
 Javith அதன்ன பார்த்தேன் அண்ணனுக்கு இன்னும் அப்பு வைகலயனு .....அடுரசக்கை அடுரசக்கை அடுரசக்கை அடுரசக்கை ...........
Rate this:
rajasekhar - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
02 ஆக, 2011 - 14:26 Report Abuse
 rajasekhar என்ன ரெம்ப நல்லவன்னு சொன்னங்க ...
Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in