பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தி பிலிம் கம்பெனி என்ற புதிய பட நிறுவனம் சார்பாக டி.டி.பிரதாபன் எஸ்.நந்தகோபால் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் "மல்லுக்கட்டு". நடிகர் தனுஷின் தம்பி வருண் (தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜாவின் தம்பி மகன்) என்ற புதுமுகம் நாயகராக நடிக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் சமீபத்தில் நடந்தது. விழாவில் கவிஞர் வாலி, டி.ராஜேந்தர், கலைப்புலி எஸ்.தானு, கலைப்புலி ஜி.சேகரன், நடிகர்கள் கார்த்தி, விமல், இயக்குநர்கள் எஸ்.ஜே.சூர்யா, பிரபுசாலமன், கஸ்தூரி ராஜா, சற்குணம் உள்ளிட்ட இன்னும் பல திரையுலக வி.ஐ.பி.க்கள் பலரும் கலந்து கொண்டு பேசினார். அதில் டி.ஆரின் பேச்சு ஹைலைட்டாக அமைந்திருந்தது.
அதன் சாரம்சம் வருமாறு, ஒருவன் ஸ்டார் ஆவதும் போர் ஆவதும் அவனவன் பிறந்த ஸ்டாரை அதாவது நட்சத்திரங்களை பொருத்துதான் அமையகிறது என்று அஸ்வினி, பரணி, கார்த்திகை .... என்று 27 நட்சத்திரங்களை வரிசையாக ஒப்புவித்த டி.ஆர்., தன் பாணியில் அடுக்கு மொழியிலும் பேசி அனைவரையும் கவர்ந்ததுடன், 25 ஆண்டுகளாக தான் ஜோசியத்தை ஆராய்ச்சியில் இருந்து வருவதாகவும் கூறி அசத்தினார் டி.ஆர்.,
பாருடா...?