டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நாணயம் படத்தில் வில்லனாக நடித்த சிபிராஜ்க்கு அதன்பிறகு சரியான படங்கள் இல்லை. அதனால் கார்த்தி நடித்த பருத்திவீரன் பாணியில் கதை இருந்தால் சொல்லுங்கள் என்று டைரக்டர்களிடம் கதைகள் கேட்டு வந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி எதுவும் அமையவில்லை. அதனால் நான்கு வருட இடைவெளிக்குப்பிறகு நாய்கள் ஜாக்கிரதை -என்ற படத்தில் நடித்தார். அந்த படம் ஓரளவு வெற்றி பெற்றதையடுத்து போக்கிரிராஜா படத்தில் வில்ல னாக நடித்த சிபிராஜ், தற்போது ஜாக்சன்துரை என்ற ஹாரர் படத்தில் நடித் துள்ளார். இந்த படத்தில் அவரது தந்தை சத்யராஜூம் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.
மேலும், ஜாக்சன்துரையை ஜூலை மாதம் வெளியிட ஏற்கனவே முடிவு செய்திருந்தபோதும், ரஜினியின் கபாலி படம் ஜூலை 1-ந்தேதி வெளியாகயிருப்பதாக முன்பு செய்திகள் வெளியானதை அடுத்து, ரிலீஸ் தேதியை முடிவெடுக்காமல் இருந்தனர். ஆனால் தற்போது ஜூலை 15-ல் கபாலி வெளியாகயிருப்பதாக செய்திகள் வெளியாகியிருப்பதை அடுத்து, அதே ஜூலை 1-ந்தேதியில் ஜாக் சன் துரையை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். இதேநாளில் சந்தானத்தின் தில்லுக்குத்துட்டு படமும் ரிலீசாக இருந்தநிலையில், தற்போது அப்படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளி வைக்கப்பட்டிருப்பதால், சிபிராஜ் படத்துக்கு மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் எளிதாக கிடைத்துள்ளதாம். இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது.