'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
படைப்பாளிகளுக்கு சுதந்திரம் இல்லை என்று அதிகமாக குரல் கொடுப்பவர் நடிகர் கமல்ஹாசன். சமீபத்தில் பாலிவுட்டில் உருவான உட்தா பஞ்சாப் படம், கடும் சர்ச்சையில் சிக்கியது. இப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக கூறி தணிக்கை குழு 89 கட்டுகள் கொடுக்க சொன்னது. ஆனால் படக்குழு அதை ஏற்க மறுக்கவே கோர்ட்டை நாடினர்.
வழக்கை வசாரித்த கோர்ட், உட்தா பஞ்சாப் படத்தில் சர்ச்சை காட்சிகள் எதுவும் இல்லை, இந்திய இறையான்மையை பாதிக்கும் காட்சிகள் எதுவும் இல்லை என்று கூறி ஒரே ஒரு கட்டும் மட்டும் கொடுக்க சொன்னது. மேலும் தணிக்கை குழுவுக்கு கோர்ட் சில அறிவுரைகளையும் வழங்கியது. கோர்ட்டின் இந்த உத்தரவால் திரைத்துறையினர் மகிழ்ச்சி அடைந்தனர். அதோடு, பலரும் உட்தா பஞ்சாப் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக படைப்பாளியான சசிகுமாரும் உட்தா படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், தணிக்கை வாரியத்துக்கு எதிரான உங்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி உங்களுடையது மட்டுமல்ல, எங்களுடையதும் தான்'' என்று அனுராக் காஷ்யப்பிற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.