'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சிறை சென்று திரும்பியிருக்கும் சஞ்சய் தத் மீண்டும் சினிமாவில் பரபரப்பாயிருக்கிறார். சஞ்சய் தத்தின் வாழ்கையை இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி படமாக்க இருக்கிறார். இதில் சஞ்சய் தத்தாக ரன்பீர் கபூர் நடிக்கிறார். இந்தப்படத்திற்கு ஹரோயின் இன்னும் முடிவாகவில்லை. இந்தநிலையில் கத்ரீனா இந்தப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சஞ்சய் தத், மனைவி மான்யதா தத் வேடத்தில் கத்ரீனா நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று சஞ்சய் தத், படக்குழுவிடம் தெரிவித்தாகவும் அதன்படி படக்குழு கத்ரீனாவிடம் பேசியிருப்பதாகவும், கால்சீட் உள்ளிட்ட விஷயங்களால் அவர் இன்னும் முடிவு சொல்லாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் கத்ரீனா நடிக்கிறாரா, இல்லையா என்பது விரைவில் தெரியவரும்.
சஞ்சய் தத்தின் வாழ்கைப் பற்றிய இப்படம் 2017ஆம் ஆண்டு கிறிதுஸ்மஸில் வெளியாக உள்ளது.