தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஏழை குழந்தைகளின் கல்விக்காக, சென்னையில் நடந்த இரவு நேர, மாரத்தான் ஓட்ட பந்தயத்தில் பங்கேற்ற நடிகர் சூர்யா, 5 கி.மீ., துாரம் ஓடி உற்சாகப்படுத்தினார்.
ஏழை குழந்தைகளின் படிப்புக்கு உதவ, சென்னை தீவுத்திடலில், இரவு நேர மாரத்தான் போட்டி நடந்தது. 6 வயது முதல், 75 வயது வரையிலான, 3,000 பேர் இதில் பங்கேற்றனர். போட்டியை நடிகர் சூர்யா கொடி அசைத்து துவக்கி வைத்தார். அத்துடன் போட்டியில் கலந்து கொண்டவர்களுடன் 5 கி.மீ., துாரம் ஓடி மற்றவர்களையும் உற்சாகப்படுத்தினார்.
குழந்தைகளின் கல்விக்காக பயன்படும் இது போன்ற நிகழ்ச்சிகளில், மக்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்ள வேண்டும், என, நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்தார்.
இந்த மாரத்தான் போட்டியில், ஐ.பி.எஸ்., அதிகாரி சைலேந்திரபாபு உள்ளிட்ட பல பிரபலங்களும் பங்கேற்றனர்.