இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
'ரோமியோ ஜூலியட்' வெற்றிக்குப் பிறகு ஜெயம்ரவி, ஹன்சிகா, லக்ஷ்மண் மீண்டும் இணைந்திருக்கும் படம் போகன். பிரபுதேவா தயாரிக்கிறார். இமான் அண்ணாச்சி, விடிவி கணேஷ், முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். தனி ஒருவனுக்கு பிறகு அரவிந்த்சாமி இதில் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். சவுந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். இமான் இசை அமைக்கிறார்.
'போகன்' பற்றி ஜெயம்ரவி கூறியதாவது: நான் இதுவரை நடித்த படங்களிலேயே இது வித்தியாசமானது. அதேபோல போலீஸ் கதைகளில் இது மிகவும் வித்தியாசமானது. 'தனி ஒருவன்' போலவே இதிலும் போலீஸ் கேரக்டர்தான். முதல் பகுதியில் ஹீரோவாக இருப்பேன். இரண்டாம் பகுதியில் வில்லனான மாறுவேன். அரவிந்த்சாமி முதல் பகுதியில் வில்லனாக இருப்பார். அடுத்த பகுதியில் வேற மாதிரி இருப்பார். அப்படி ஒரு திரைக்கதை. போகனாகிய நான் எல்லாவற்றுக்கும் ஆசைப்படுகிறவன். அரவிந்த்சாமி எல்லா ஆசைகளையும் அனுபவித்து முடித்தவர். இந்த இரண்டு பேருக்குமான கதைதான் 'போகன்'.
முன் எப்போதும் இல்லாத அளவிற்கு சண்டை காட்சிகளில் ரிஸ்க் எடுத்திருக்கிறேன். டூப் போடாமல் பில்டிங் டூ பில்டிங் தாவியிருக்கிறேன். சத்யாமாகத்தான் சொல்றேன். நம்புங்க. ஹன்சிகாவுடன் நடிக்கும் 3வது படம் முதல் படத்தில் பள்ளி மாணவி மாதிரி நிறைய கத்துகிட்டிருந்தார். இப்போ எனக்கே பாடம் நடத்துகிறார். நல்ல வளர்ச்சி. 60 சதவிகித படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. என்றார் ஜெயம்ரவி.