தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ராமநாராயணனின் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் 100வது படத்தை இயக்கவிருக்கிறார் சுந்தர்.சி. மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாக இருக்கிறது. இப்படத்துக்கு கதாநாயகன் மற்றும் கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகனாக சூர்யா நடிக்கவிருப்பதாக சில தினங்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. இதற்கு, "எந்த ஒரு செய்தியையும் நம்பாதீர்கள். ஒரு படம் ஒப்பந்தமாவதற்கு முன் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவரும் வரை காத்திருங்கள் " என்று தெரிவித்திருக்கிறார் சூர்யா.
அதை ஆமோதிப்பதுபோல் குஷ்புவும் "இதுவரை எந்த நடிகரும் முடிவாகவில்லை" என்று தெரிவித்திருக்கிறார்.
சுந்தர்.சியின் படம் மட்டுமன்றி, வெங்கட்பிரபு இயக்கும் சென்னை 28 படத்தின் 2-ம் பாகத்திலும் வெங்கட்பிரபு கேட்டுக் கொண்டதற்கு இணங்க சூர்யா கௌரவ வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இது குறித்தும் சூர்யா மறுப்பு தெரிவித்திருக்கிறார். சென்னை 28 2-ம் பாகம் படக்குழுவிடம் சூர்யா நடிப்பது பற்றி கேட்டால், "அப்படி எந்த ஒரு ஐடியாவும் இல்லை" என்று தெரிவித்தார்கள்.
ஆக மொத்தம்.... தற்போது ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் சிங்கம் 3 படமான எஸ்-3 யில் மட்டுமே கவனம் நடித்து வருகிறார் சூர்யா.