ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் டி.வி தொகுப்பாளரான மா.கா.பா ஆனந்த் சிவகார்த்திகேயன் பாணியில் சினிமாவுக்கும் வந்தார். அவர் அறிமுகமான 'வானவராயன் வல்லவராயன்' தோல்வி அடைந்ததால் வாய்ப்புகள் குவியவில்லை. அதன் பிறகு அவர் நடித்த 'அட்டி', 'நவரச நிலகம்' படங்களும் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. எதையாவது புதிதாக செய்தால் தான் முன்னுக்கு வரமுடியும் என்று கருதிய மா.கா.பா., ஆனந்த், ரஜினி சாயலில் நடிக்க முடிவு செய்து விட்டார்.
அவர் அடுத்து நடிக்கும் படத்தின் பெயர் 'மாணிக்'. 'பாட்ஷா' படத்தில் ரஜினியின் பெயர் 'மாணிக்பாட்ஷா'. அதில் மாணிக்கை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டார்கள். 'எதிர்நீச்சல்' படத்தில் சிறிய கேரக்டரில் நடித்த சூசா குமார் ஹீரோயின். மார்ட்டின் இயக்குகிறார், பழனிகுமார் ஒளிப்பதிவு செய்கிறர். தரண்குமார் இசை அமைக்கிறார். வருகிற 16ந் தேதி ஏவிஎம் ஸ்டூடியோவில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்குகிறது.